கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ

அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
அதிமதுரம் டீ
அதிமதுரம் டீ
Published on

தேவையான பொருட்கள் :

அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 டம்ளர்

நாட்டு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.

இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com