search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    காது இரைச்சல் - தீராத தொல்லை
    X

    'காது இரைச்சல்' - தீராத தொல்லை

    • காது இரைச்சல் என்பது நோயே அல்ல.
    • இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும்.

    அனைத்து இசையையும், பேச்சையும் கேட்பதற்காக படைக்கப்பட்டது தான் காது. அந்த காதுக்குள்ளேயே இரைச்சல் கேட்பது பலருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு அந்த பிரச்சனை உள்ளது.

    காது இரைச்சல் (Hnnitus) என்பது என்ன?

    காது இரைச்சல் என்பது நோயே அல்ல. அது ஒரு உணர்வு (Sensation) உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு. இதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலில் வேறு பகுதியிலும் இருக்கலாம். காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, விசில் அடிப்பது போன்றோ, அல்லது 'ஸ்விங்' என்று காற்று அடிப்பது போன்றோ இருந்தால் ஒரு நபருக்கு காது இரைச்சல் இருக்கிறது என அர்த்தம். இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும். வேறு சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். இந்த இரைச்சல் சுற்றுப்புற சூழல் அமைதியாக இருந்தால் அதிகமாக தெரியும். குறிப்பாக இரவில் இதனால் தூக்கம் குறைவதுடன் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

    தற்காலிக காரணங்கள்

    * வெளிக்காதில் இயற்கையாக சுரக்கின்ற மெழுகு கட்டி யாகி காதை அடைத்துக்கொள்ளுதல்.

    * அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக் கொண்டால்.

    * காளான் தொற்று ஏற்பட்டால்

    * அடிக்கடி சளி பிடிப்பதால்

    * நடுக்காதில் நீர் கோர்த்துக் கொண்டால் மற்றும் சீழ் பிடித்தால் காதில் இரைச்சல் கேட்கும்.

    * தொண்டையையும் காதையும் இணைக்கிற 'காது மூக்கு தொண்டைக்குழாய் சுழற்சி அடைந்து வீங்கிக் கொண்டாலும் காது இரைச் சல் வரும். ஒலி மாசு தரும் போது இரைச்சல் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். பெருநகரங்களில் சாதாரண மாக 90 டெசிபல் சத்தம் கேட்டுக் கொண்டிருக் கிறது.

    *இயந்திரங்களுக்கு மத்தியில் வேலை செய்பவர்கள் பாதிப்படைகின்றனர்.

    * 'வாக் மேன்' அல்லது 'இயர் போன்' அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு பாதிப்பு அதிகம்.

    * விமான நிலையம் போன்ற அதிக சத்தம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

    அதிக ஒலியினால் 'காக்ளியர்' எனும் உள்காது நரம்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, அங்கு இருக்கும் 'நரம்பிழைகள்' சிதைந்து விடுகின்றன. இதனால் காது கேட்கும் திறன் குறைந்து அதனால் இரைச்சல் ஏற்படும்.

    நிரந்தர குறைபாடு

    * மேற்கூறிய அதிக ஒலி மாசுவினால் காது கேட்கும் திறன் நிரந்தரமாக பாதிப்படையும்.

    * வயதானவர்களுக்கு இயற்கையாகவே கேட்கும் திறன் குறைந்து, அதனால் இரைச்சல் ஏற்படும்.

    *பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இரைச்சல் ஏற்படும்.

    * நடுக்காதில் 'எலும்பு முடக்கம்' எனும் நோய் ஏற்படும் போது எலும்புகள் குறுகி ஒலி அதிர்வுகள் உள்காதிற்குள் செல்வது தடைபடும். இது உடனே சரி செய்ய முடியாவிட்டால் நாளடைவில் காது கேட்கும் திறன் பாதித்து அது நிரந்தர குறைபாடாக மாறும்.

    * பல்வேறு நோய்களுக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது காது திறன் பாதிக்கப்பட்டு, இரைச் சல் ஏற்படும். உதாரணமாக காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இருதய நோய்.

    சிகிச்சை

    மேற்கூறியவற்றில் நிரந்தரக் குறைபாடு ஏற்பட்டு காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் போது, "காது கருவி பொருத் துதல்" ஒன்றே தீர்வு. ஏனென்றால் எவ்வளவு சதவீதம் திறன் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த குறைபாட் டிற்கு தகுந்த சத்தம் உள்ளே செல்லும்போது காதிற்குள் கேட்கும் இரைச்சல் முற்றிலும் நிற்கும். அதனால் கட்டாயம் கருவி (Hearing Aid) பொருத்திக் கொள்ள வேண்டும்.

    * ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் இரைச்சலுக்கான காரணம் கண்டறிந்து சரி செய்யலாம்.

    * இரைச்சலுக்கு தற்போது மறைபோலி தொழில்நுட்பம், டி.ஆர்.டி. போன்ற முறைகளும் இப்போது பிரபலம் அடைந்து வருகின்றன.

    மேலும் ஆலோசனை களுக்கு தயங்காமல் அழையுங்கள். செல்: 9626297922.

    மு. கண்ணன் நிறுவனர், இன்ஸ்டா ஹியரிங் சொல்யூஷன்ஸ்

    Next Story
    ×