search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளிக்கலாம்...
    X

    கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளிக்கலாம்...

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.
    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளித்து விடலாம்.

    இதோ சில யோசனைகள்...

    • வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக இருக்கும் என்பதால், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். மோர், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்.

    • ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு உடலுக்கு தேவையான தாதுப்பொருட்களை, வைட்டமின்களையும் அளிப்பதால், அதை அடிக்கடி அருந்தலாம்.

    • கூடுமானவரை காபி, டீயை தவிர்ப்பது நல்லது.

    • காரமான உணவு வகைகளை தவிர்த்து வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    • கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

    • மாமிச உணவு வகைகள் உஷ்ணத்தை அதிகரித்து, வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

    • சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். கடை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவதாக இருந்தால் காலை 10 மணிக்குள் போய்விட்டு திரும்பிவிடுவது நல்லது.

    • வெளியே செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள். (அதை திருப்பி கொண்டு வர மறந்துவிடாதீர்கள். ஏனெனில் குடையும் மறதியும் இரட்டைப் பிறவிகள்). குடை இல்லாத பட்சத்தில் தொப்பிஅணிந்து செல்லுங்கள். கிராமப்புறங்களில் வெளியே செல்லும் பெரியவர்களும், வயல்களில் வேலை செய்பவர்களும் தலைப்பாகை அணிவது வழக்கம். இது வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.

    • மென்மையான, தளர்வான பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.

    • தினமும் இருமுறை குளிப்பது நல்லது.

    • படுக்கை அறை நன்கு காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஜன்னலை திறந்து வைத்து அதன் அருகில் தலைவைத்து படுக்காதீர்கள். திருடர்கள் கைவரிசையை காட்டிவிடக்கூடும்.

    Next Story
    ×