

2-வது 3-வது மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
தென் மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியதால் வெப்பத்தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையான வெப்பம் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
புழுக்கமான நாட்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2,09,266 கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாய் சூரிய ஒளியில் இருக்கும்போது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது குறைப்பிரசவ அபாயத்தை அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
2-வது 3-வது மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் இந்திய வெப்பக் குறியீடு, கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான வெப்ப அழுத்தத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிட முடிந்துள்ளது. வெயில் காலங்களில் கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.