பதப்படுத்தப்பட்ட உணவு, வேலைப்பளு காரணமாக ஆண்மைக்குறைவு பாதிப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினை.3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம்.
பதப்படுத்தப்பட்ட உணவு, வேலைப்பளு காரணமாக ஆண்மைக்குறைவு பாதிப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகளும், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, ரசாயன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பொருட்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலுமே ரசாயனம் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இந்த காற்றை சுவாசிப்பதாலும் நமது உடலுக்குள் ரசாயனம் செல்கிறது.

இப்படி தினமும் 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். இந்த ரசாயனங்கள் பெண்கள் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருப்பதற்கும், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது.

இதன் மூலம் ரசாயன பயன்பாடு தாம்பத்திய உறவை சீர்குலைப்பதற்கு ஒரு காரணமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் சர்க்கரை நோயும் பலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com