search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கருப்பை நீர்கட்டி பிரச்சினையை குணப்படுத்தும் இயற்கை வழிகள்
    X

    கருப்பை நீர்கட்டி பிரச்சினையை குணப்படுத்தும் இயற்கை வழிகள்

    • ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும்.
    • அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.

    மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.

    இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சினை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

    காரணம்:

    இந்த நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாக கூட வரலாம். அதேபோல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.

    வைட்டமின்கள்:

    பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்திடும்.

    ஆப்பிள் சிடர் வினிகர்:

    ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படி குடிப்பதனால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.

    தேங்காய் எண்ணெய்:

    சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழுபலன்களும் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெய்யை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதேபோல கெட்ட கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.

    ஆமணக்கு எண்ணெய்:

    ஆமணக்கு எண்ணெய்யை லேசாக சூடு படுத்திக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தி துணியை கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை எனில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது. இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.

    கிரீன் டீ:

    சூடான நீரில் கிரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.

    கற்றாழை:

    கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்னை இருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.

    நெல்லிக்காய்:

    ஒரு டம்ளர் நீருடன் அரைகப் நெல்லிக்காய் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களை குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்சின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

    சீரகம்:

    தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். பசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்சின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.

    வெந்தயம்:

    நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கி இருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.

    Next Story
    ×