படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த இதை சாப்பிடுங்க

படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த இதை சாப்பிடுங்க
Published on

படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. தூங்கும் போது அறியாமல் சிறுநீர் கழிப்பதை குறிக்கிறது. இது எல்லா வயதிலும் நடக்க கூடியது தான். குழந்தைகள் குறிப்பாக 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல. ஆனால் வளர்ந்த பிள்ளைகள், பதின்ம வயது பிள்ளைகள், டீன் ஏஜ் வயதினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறு குழந்தைகள் அதாவது 7 வயதுக்குள் இருக்கும் குழந்தை படுக்கையை நனைப்பது இயல்பானது. இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பருவ வயது வந்த பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, குழந்தைப்பேறுக்கு பிறகு பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது, மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இந்த பிரச்சனையை கொண்டிருப்பது என எல்லாமே கவனிக்க வேண்டிய ஒன்று. அதேபோன்று வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்வது என வயதுக்கேற்றார் போல இந்த பிரச்சனையை எதிர்கொள்வதை பார்க்க முடிகிறது.

தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது தன்னை அறியாமல் வெளியேறும் ஒரு நிகழ்வு தான். 7 வயதுக்குட்பட்ட குழந்தை சிறுநீர் கழிப்பதை நாம் நாளடைவில் அதில் இருந்து சரியான பழக்க வழக்கம் மூலம் விடுவிக்கலாம். குழந்தை தூங்குவதற்கு முன்பு அவர்களை சிறுநீர் கழிக்க சொல்லிய பிறகு படுக்க வைக்கலாம். நள்ளிரவிலும் ஒரு முறை குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லி படுக்க வைக்கலாம்.

பெரியவர்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன் குறைவாக சுரப்பதுதான். தூக்கமின்மை காரணம் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமாகிறது. தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்துகள் எடுப்பது, உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு மருந்துகள் எடுப்பது கூட படுக்கையை நனைக்க காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோயாளியாக இருக்கும் போது சர்க்கரை கட்டுக்குள் வைக்காத போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

மேலும் கட்டுக்கடங்காமல் சிறுநீர் வெளியேறவும் செய்யும். அதனாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். பெண்களாக இருந்தால் அவர்களுக்கு கருப்பை இறக்கம் இருந்தால் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழியலாம். சிறுநீரகப்பாதையில் தொற்று இருப்பவர்களுக்கு படுக்கையில் தங்களை அறியாமல் சிறுநீர் பிரிவது இருக்கும். பெல்விக் வலிமையாக இல்லாத பெண்களுக்கும் கூட சிறுநீர் தானாக வெளியேறலாம்.

சிலருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். கீழே விழுந்து காயம் பட்டிருப்பார்கள். இதனால் சிறுநீரகப்பையிலும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கலாம். இதனாலும் சிறுநீர் தானாக வெளியேறலாம். இது போன்று பெண்களுக்கு கருப்பை வீக்கம், ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவாக்கம், தூக்கமின்மை, சிறிய விஷயத்துக்கெல்லாம் பயம், மன அழுத்தம் , குடலில் பூச்சிகள் இருப்பது என இவையெல்லாம் தூக்கத்தில் தானாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாக சொல்லலாம். படுக்கையில் சிறுநீர் கழிக்க என்ன காரணமாக இருந்தாலும் அதை சரிசெய்ய சிறந்த மருந்து சித்தமருத்துவத்தில் சொல்லப்படும்

அமுக்கிரா சூரணம். அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் இந்த சூரணம் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். இது நரம்புகளை வலுப்படுத்தக்கூடியது. சித்த மருத்துவத்தின்படி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அனைத்தும் இந்த அஸ்வகந்தாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com