

பாகற்காய் - 150 கிராம்
முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
புளி மற்றும் வெல்லம் - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
விதையை நீக்கி பாகற்காயை நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் பாகற்காயை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
வதக்கிய பொருட்களுடன் புளி, வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
அத்துடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
பாகற்காய் சட்னி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.