அல்சைமர் நோய் வருவதற்கான காரணமும் - தீர்வும்

60 வயதை கடந்தால் அல்சைமர் நோய் வரக்கூடும் என்பார்கள், ஆனால் தற்போது இளம்வயதிலேயே பலருக்கும் வருகிறது. அதனை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
அல்சைமர் நோய் வருவதற்கான காரணமும் - தீர்வும்
Published on

பிற வியாதிகளை போல அல்சைமர் நோயும் உயிர் கொல்லி தான். உலகில் அதிக அளவில் கொல்லும் நோய்களின் பட்டியலில் அல்சைமரும் அடங்கும். மனிதனின் நினைவகளை போக்கி, நியாபகம் இல்லாமல் மூளையை செயல் இழக்க செய்வது அல்சைமர் நோய் ஆகும்.

பெரும்பாலும் வயது முதிர்வின் காரணத்தால் அல்சைமர் வருவது வழக்கம். ஆனால் தற்போது இளம் வயதினரிடையே வருகிறது. இதனை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலாது. ஆரம்பத்திலேயே நோயின் தன்மை அறிந்து குணப்படுத்தலாம். ஆனால் நோய் உச்சக்கட்டத்தை அடைந்தால் தீர்க்க எவ்வித வழியும் இல்லை.

இந்த நோய் இளம் வயதினருக்கு வருவதற்கான காரணம் முன்னோர்களின் மரபணுக்கள் வாயிலாக வரக்கூடும், விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டால் நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

வயதானவர்களை நாம் குழந்தை போல் கவனித்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு சிலவற்றை மறக்க ஆரம்பித்தால், அவர்களை தினமும் ஏதோ வேலையில் பிசியாகவே வைத்திருக்க வேண்டும். நம் உடலுக்கு தேவைப்படும் போது ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டாம்.

உதாரணத்திற்கு எப்போதும் செல்லும் வழியில் போகாமல், புதிய வழியில் வீட்டிற்கு செல்ல முயற்சிக்கலாம். மேலும், புதிதாக ஏதாவது கற்று கொள்ளவும் முயற்சி செய்யலாம்.

நாம் புதிய வேலையில் நம்மை ஈடுபடுத்தி கொண்டால் உடம்பில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடிகிறது.

எப்போதும் போல் இல்லாமல் புதுமையான முயற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு வழக்கம்போல் பல துலக்காமல், மாற்று கையில் துலக்க முயற்சியுங்கள்.

நம்மை நாம் வேலையோடு ஒன்றாக இணைத்து கொண்டு மூளைக்கு வேலை கொடுத்து கொண்டே இருந்தால் அது தானாக வேலை பார்க்கும். அதற்கு எவ்வித வேலையும் கொடுக்க மறந்தால் அது சற்று குழப்பம் அடைய செய்யும். அதன் விளைவு உயிரை பறித்துவிடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com