search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்
    X

    கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

    • கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்
    • தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டு பேசியது: தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளில் 21 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

    குறைந்த விலையில் பொருள்களையும், சேவைகளையும் நுகர்வோர் பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்களைப் போல விற்பனை மற்றும் சேவை வழங்கும் பணிகளை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்குகின்றன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    பிரச்சனை ஏற்படும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படும் குடிமைப்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள், கடன் சங்கங்கள், வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கூட்டமைப்புகள் அனைத்தும் நுகர்வோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவது, நியாயமற்ற ஒப்பந்தத்தை திணிப்பது போன்ற நுகர்வோருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்றார். பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். திருசெங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குனர் விஜய்சக்தி பங்கேற்று பேசினார். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார்.


    Next Story
    ×