

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அது இரு நாட்களில் வேற மாதிரி பேசுகிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா... சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார்.