

விமர்சனங்களுக்கு இடையே `மெர்சல்' படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' படத்திற்கு சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தீபாவளிக்கு ரிலீசாகவில்லை.
`மெர்சல்' பிரச்சனையால் அதிரிந்தி படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், `அதிரிந்தி' படத்திற்கு தணிக்கைகுழு `யு/ஏ' சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதனை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவம் சார்பில் ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.