ஆனந்த்ராஜை நெகிழவைத்த விஜய்

பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் தன்னை நெகிழ வைத்ததாக நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனந்த்ராஜ்
ஆனந்த்ராஜ்
Published on

வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர்போனவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஆனால் இவர் சமீபத்திய படங்களில் காமெடியனாகவே நடிக்கிறார். இவர் தற்போது விஜய்யின் பிகில் படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து ஆனந்த்ராஜ் கூறியதாவது:- “ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, எனக்கு பிகில் பட சூட்டிங் இருந்தது. நானும், விஜய்யும் நடிக்க வேண்டிய காட்சி அன்று படமாக்கப்பட இருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், விஜயிடம் இதுகுறித்து சொன்னேன். 

உடனே விஜய், எனக்காக அட்லீயிடம் பேசிவிட்டு, என்னை கிளம்ப சொன்னார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால், நான் விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. மறுநாள் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற போது, விஜய் என்னிடம் அதுகுறித்து கேட்டார். நான் நடந்ததை கூறினேன். விழாவில் பங்கேற்க முடியாததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டார். விஜய்யின் இந்த பண்பு என்னை நெகிழவைத்தது”. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com