சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

சூர்யாவுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் தயாரித்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா, வெங்கட் பிரபு
சூர்யா, வெங்கட் பிரபு
Published on

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களில் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள் செயல்பட சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதன்முலம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகும் முதல் தமிழ் படம் அதுவாக தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்னே வேறு ஒரு படம் ரிலீசாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்' படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com