`தீரன் அதிகாரம் ஒன்று' - நீக்கப்படும் காட்சிகள் குறித்து படக்குழு விளக்கம்

கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
`தீரன் அதிகாரம் ஒன்று' - நீக்கப்படும் காட்சிகள் குறித்து படக்குழு விளக்கம்
Published on

இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப்படத்தில் காட்டப்படவில்லை.
இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக `தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com