ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தாடி பாலாஜி

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி, மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.
தாடி பாலாஜி
தாடி பாலாஜி
Published on

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உணவு, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி பூந்தமல்லி பகுதியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடிகர் தாடி பாலாஜி, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

அதேபோல் மற்றொரு சின்னத்திரை நடிகரான குமரன், திருவேற்காட்டில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு 3,500 முக கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com