

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் , நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு மற்றும் மீனா படப்பிடிப்பிற்கு இணைந்துள்ளனர்.
நடிகை குஷ்புவும் மீனாவும் விமான நிலையத்தில் சந்தித்து ஒன்றாக பயணித்து உள்ளனர். இவர்கள் சந்தித்த தருணத்தை இருவரும் தங்கள் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.