இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்

விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தான் இனி எங்கேயும் தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
Published on

விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

விழாவில் சிம்பு பேசியதாவது, 

பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும். 

வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார், அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். அந்த நிலையில், விவேக் விட்டுக் கொடுத்ததால் தான், சந்தானம் இன்று சினிமாவில் இருக்கிறார். இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதி அளித்த பெற்றோருக்கு நன்றி.

என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். படிக்க, கற்றுக்கொள்ள தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். முதலாவது வரும் ஒருவனை மட்டும் தான் பார்க்கிறார்கள். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால் அந்த குழந்தைக்கு அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சி கொடுக்க முயற்சிப்பதில்லை. தண்டிக்க தான் செய்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைக்கு வர எனது பெற்றோர் தான் காரணம். 

போட்டி, பொறாமை எதற்கு, எதை எடுத்துக் கொண்டு போகிறோம். மனதில் பட்டதை தான், நான் பேசுவேன். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் போது, அவரது பேச்சில், முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் மீது கோபப்பட்டு, திட்டியிருக்கிறேன். அவர் செய்த ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் அனைத்துமே தவறா, நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு மனிதாபிமானத்துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. நான் திட்டுகிறேன் என்றால் பலரும் சும்மா திட்டுகிறார்கள்.

ஏஏஏ படத்திற்கும் அவரை திட்டினார்கள். ஏன் திட்டினார்கள் என்று தெரியவில்லை. அந்த ஏஏஏ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த ஏஏஏ என்று விஷாலை குறிப்பிட்டு, (Arise, Awake, Acheive) இதை தான் அவரிடம் பார்த்தேன். 

கட்அவுட் வைத்த தன் ரசிகர் இறந்தது வருத்தத்தை அளித்தது. அவரை கொலை செய்ததால், அவரது வாழ்க்கை மட்டுமில்லாமல், அவரை கொலை செய்த 9 பேரின் வாழ்க்கையும் பாலானது. 

எனக்கு பிடித்ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு பிடித்த மாதிரி நான் இருந்து கொள்கிறேன். ஆனால் நான் தாமதமாக வருவது பலருக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். அப்படி இருந்தால், இனி நான் தாமதமாக வர மாட்டேன். லேட்டாகவும் போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன் என்றார். #EzhuminTrailerLaunch #STR 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com