ரஜினியை மறைமுகமாக தாக்கிப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன்

விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்றார். #TrafficRamasamy #SAChandrasekar
ரஜினியை மறைமுகமாக தாக்கிப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன்
Published on

கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

விழாவில் இயக்குநரும், கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

" படத்தின் இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.  

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் " என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com