ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி

25வது ஆண்டை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்டு பாட இருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி
Published on
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இசை நிகழ்ச்சி மூலம் கொண்டாடி வருகிறார். மேலும் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார்.

வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாடுகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘2.O’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com