

3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்கு முன்பாக தனது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து அளிக்க செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.
அதாவது, இன்று மாலை 7 மணிக்கு `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்படும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து படம் வருகிற ஜுன் 30-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.