

எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, `அதிரிந்தி' படத்திற்கான தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்காததால் சொன்ன நாளில் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.