இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தியின் அடுத்த படம்

கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
கார்த்தி
கார்த்தி
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த இந்த டீசரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். ‘ரெமோ’ படத்தினை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். 

இப்படத்தில் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com