search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய்க்கு அடுத்து தான் அஜித் - வாரிசு பட தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு
    X

    தில் ராஜு

    விஜய்க்கு அடுத்து தான் அஜித் - வாரிசு பட தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு

    • அஜித், விஜய் திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இருவரும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.


    வாரிசு - துணிவு

    இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.


    வாரிசு - துணிவு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது.


    வாரிசு படக்குழு

    துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×