search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எல்லா கொலைக்கு பின்னாடியும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும்.. கவனம் ஈர்க்கும் கண்ணை நம்பாதே டிரைலர்
    X

    எல்லா கொலைக்கு பின்னாடியும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும்.. கவனம் ஈர்க்கும் கண்ணை நம்பாதே டிரைலர்

    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில், 'ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.




    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இபடத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×