கேப்டன் மில்லர் சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது- உதயநிதி வாழ்த்து

தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.இப்படம் முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கேப்டன் மில்லர் சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது- உதயநிதி வாழ்த்து
Published on

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com