உதயநிதியிடம் ரூ.6 லட்சம் கொடுத்த வடிவேலு.. ஏன் தெரியுமா?

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்தார்.வடிவேலு ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.
உதயநிதியிடம் ரூ.6 லட்சம் கொடுத்த வடிவேலு.. ஏன் தெரியுமா?
Published on

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்து பாராட்டை பெற்றார். தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com