என் மலர்
சினிமா செய்திகள்

கார்த்தி - சூர்யா
அஜித் தந்தை மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா மற்றும் கார்த்தி
- அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
- நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தந்தையின் மறைவுக்கு பிறகு அஜித்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்நிலையில் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆறுதல் கூறினர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
Next Story






