மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர்

'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியானது.
மெய்யழகன் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இந்தி நடிகர்
Published on

'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப் மாதம் 27-ந்தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது.

திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பல நாட்டு மக்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகரான அனுபம் கெர் திரைப்படத்தை பார்த்து பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் " மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். எம்மாதிரியான படைப்பு. அழகான ஒரு திரைப்படம் . நிறைய அழுதேன். அரவிந்த் சுவாமி மற்றும் கார்த்தி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் ச. பிரேம் குமாருக்கு எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுருந்தார்.

அனுபம் கெர் மற்றும் அரவிந்த் சுவாமி இதற்கு முன் 1998 ஆம் ஆண்டு வெளியான சாத் ரங் கி சப்னே திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com