இருசக்கர வாகனங்கள் இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த ஹோண்டா

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஹோண்டா நீட்டித்து இருக்கிறது.
ஹோண்டா ஸ்கூட்டர்
ஹோண்டா ஸ்கூட்டர்
Published on

ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு நாடு முழுக்க அனைத்து ஹோண்டா விற்பனையகங்களுக்கும் பொருந்தும். நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஏப்ரல் 1, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுபெறும் வாகனங்களுக்கு பொருந்தும். வாடிக்கையாளர்கள் நலன் கருதி வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா இந்தியா பவுன்டேஷன் சார்பில் ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் என ஐந்து மாநிலங்களுக்கு ரூ. 6.5 கோடி தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com