விருச்சிகம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.
Viruchigam
Published on

செவ்வாயின் ஆதிக்கப் பெற்ற விருச்சிக ராசியினரே,

விருச்சிக ராசிக்கு 3,4-ம் அதிபதியான சனி பகவான் கோட்சாரத்தில் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 27.7.2026 முதல் 10.12.2026 வரை வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார்.ஆயுள் ஆரோக்கியம் சிறக்கும்.மன அழுத்தம், மன இறுக்கம், மனநோய், மறதி நீங்கும். உடலுக்கும், ஆன்மாவிற்கும் மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரை தடைபட்டு வந்த நல்ல விஷயங்கள் நடக்கும். எண்ணங்கள் அனைத்தும் பலிதமாகும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு உருவாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே உற்சாகமாக உடனுக்குடன்நிறைவேற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.கெளரவ தோற்றம் உருவாகும். மிடுக்காக உடை அணிவீர்கள்.மனித நேயம் பற்றிய சிந்தனை இருக்கும். கொடூர குணம் உள்ளவர்கள் கூட குழந்தைத்தனமாக மாறுவார்கள். தாத்தா மற்றும் முப்பாட்டனை ரோல் மாடலாக நினைப்பார்கள். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.

காதல் விசயங்கள், எதிர்பாலின நட்பால் அசிங்கம், அவமானம் ஏற்படலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பது நல்லது. சனி பகவான் வக்ர கதியிலும் பயணிக்கும் காலத்தில் உற்றார், உறவினர்கள், குடும்ப உறவுகளுடன் கனிவுடன் பேச வேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைக்கவும். தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயர்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை)

விருச்சிக ராசிக்கு 8, 11-ம் அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் நட்சத்திரம் அடையும் காலத்தில் இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு கிடைக்கும். லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து தேடி வரும். வருமானமும் சேமிப்பும் உயரும். தாய் வழி நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத மிகப் பெரிய தொழில் உதவி, ஆதாயம் கிடைக்கும். வெகுநாளாக தீராத தாய்வழி சொத்துப் பிரச்சனை சுமுகமான பேச்சுவார்த்தையில் முடிந்துவிடும். சொத்துச் சேர்க்கை அதிகமாகும். பெரிய கடன் தொகைக்கு முயற்சி செய்தால் கடன் கிடைக்கும். இயன்றவரை தேவைக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது.தாயின் அன்பும் அரவணைப்பும் ஆசிர்வாதமும் பரிபூரணமாக இருக்கும். சிலருக்கு சட்டத்திற்கு புறம்பான இரண்டாவது திருமணம் நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். வராக்கடன் என்று முடிவு செய்த பணம் வரும். வட்டிக்கு வட்டி கட்டி கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியாதவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். பல வருடங்களாக தீராத கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய சங்கங்களில் முக்கிய நிர்வாகப் பதவிகள் தேடி வரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் 10.10.2026 முதல் 10.12.2026 வரை)

விருச்சக ராசிக்கு 3,4ம் அதிபதியான சனிபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் வக்ரமடையும்போது ரிப்பேர் செலவு வரும். அரசுக்கு வரி பாக்கி கட்ட நேரும் .இதுவரை பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் மிகுந்த அரசியல்வாதிகள் கூட தியாக மனப்பான்மை நிறைந்த அரசியல்வாதியாக மாறுவார்கள். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.உஷ்ண நோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள் அல்லது அதிக மதிப்புள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்பீர்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றத்தை தருவார்.உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். உடன் பிறந்தவர்களின் வீட்டு விசேஷத்தை முன் நின்று நடத்துவீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். வலது பக்க வீட்டுக்காரரின் தொல்லை குறையும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். தந்தை வழி பூர்வீகச் சொத்து சில மனஸ்தாபங்களுக்கு பின் கிடைக்கும். சாஸ்திர ஞானம் அதிகரிக்கும்.ஜோதிடம் கற்கும் ஆர்வம் வரும். கைவிட்டுப் போன பூர்வீகச் சொத்து திரும்பி வரும். ஒரு சிலர் கோவிலுக்கு சொத்து தானம் தருவார்கள்.

திருமணம்

ராசிக்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் பூர்வ ஜென்ம தம்பதிகளே இந்த ஜென்மத்திலும் காதலித்து திருமணம் செய்வார்கள். சிலருக்கு தாய்மாமன் வழியில் திருமணம் நடைபெறும். சில விருச்சிக ராசியினரின் குழந்தைகள் காதலிக்க ஆரம்பிப்பார்கள். வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.

பெண்கள்

குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் வருமான பற்றாக்குறை அகலும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் வளர்ச்சி பல மடங்கு அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.பிறரின் பணப் பிரச்சனையில் தலையிடக்கூடாது. புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.ஆரோக்கியம் சீராகும்.புத்திர பாக்கியம் கிடைக்கும்.

முதலீட்டாளர்கள்

சொந்த தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும்.புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு பல கிளைகளை திறந்து, தொழிலை விரிவு செய்வீர்கள். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஏற்கனவே கையிருப்பில் இருந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். கூட்டாளிகளிடம் நல்லுறவு நீடிக்கும். சிலருக்கு பல புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பலருக்கு வேலை கொடுப்பீர்கள். புதிய தொழில் முறையில் போதிய அனுபவம் இல்லாத முறையைபற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள்

வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுவரை வேலைக்கு செல்லாதவர்கள் கூட இனி வரக்கூடிய காலகட்டத்தில் அயராது உழைப்பார்கள்.மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். பிரச்சினை வந்தாலும் வேலையிலும் தொழிலிலும் உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பதவி உயர்வும், நல்ல சம்பளமும் கிடைக்கும். சிலர் உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாம்.சிலருக்கு போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும்.

அரசியல்வாதிகள்

பதவி ஸ்தான அதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவே விருச்சிக ராசிக்கு பாதக ஸ்தானமாக இருப்பதால் நல்லது நடந்தாலும் அது கெட்டதும் மிகுதியாக வெளிப்படும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் , கவுரவ பதவியில் இருப்பவர், அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். முன்கோபம் காரணமாக மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகமாக இருக்கும். ஏதேனும் புதிய வழக்குகள் உருவாகலாம். கட்சித் தொண்டர்களை பகைக்க கூடாது. அவ்வப்போது களப்பணிகள் செய்வது மூலம் மக்களின் மேல் நம்பிக்கையை அதிகரிக்க முடியும்.

பரிகாரம்

மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து உதவுவது நல்லது. பவுர்ணமி திதியில் மஹாலஷ்மி அஷ்டோத்திரம்,லலிதா சஹஸ்ர நாமப் பாராயணம் செய்யவும் விருப்பங்கள் நிறைவேறும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com