

புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாய் சனியின் பார்வை உள்ளது. சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். தொட்டது துலங்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். நிலையான, நிரந்தரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். நிம்மதியாக உறங்குவீர்கள். இளம் பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும். ஆடி வெள்ளிக்கிழமை மஞ்சள் நிற உணவு தானம் வழங்கவும்.