

நிதானம் தேவை. ராசி அதிபதி சுக்ரன் கேதுவுடன் சேர்வதும் நீச்சம் அடைவதும் சற்று சுமாரான பலனையே ஏற்படுத்தும் அமைப்பாகும். மேலும் 10ல் குருவரும் காலங்களில் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழ மொழியாகும். கோட்ச்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் நிலைமைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதால் வாழ்க்கை பயணத்தை இலகுவாக்க முடியும். திருமணம் மற்றும் சுபகாரிய முயற்சியில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக பற்று உண்டாகும். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். அலைக்கழித்த வம்பு வழக்கிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து வழிபடவும்.