search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதாணி"

    • அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் என்று பொருள்.
    • மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர்.

    அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர்.

    சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம்.

    அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். "அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது'' எனக் கேட்டது.

    சீதாதேவியும் "மருதாணி மரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.

    ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே "அசோகாஷ்டமி'' நாளாகும். பங்குனி மாத அமாவாசையில் இந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

    கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி மருதாணி அரைத்து பூசிக் கொள்ளலாம். மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

    த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ

    பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

    • அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
    • போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கூம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் நடக்கும் விசேஷங்கள் முதல் விழா காலங்களில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் தவிர்க்க முடியாததாக மருதாணி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.

    அந்த காலத்தில் வீட்டில் மருதாணி இலையை அரைத்து மருதாணி வைத்து அலங்கரித்தனர்.

    ஆனால் தற்போது மருதாணி கூம்புகள் அறிமுகமான பிறகு விதவிதமான வகைகளில் மருதாணி கைகளில் வைக்கப்படுகிறது.600-க்கும் மேற்பட்ட மருதாணி வடிவமைப்புகள் கண்டு பிடிக்க ப்பட்டுள்ளன.

    போலியான மருதாணி கூம்பு களால் உடல்ந லத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.***திருப்பதி, ஜன.11-

    மருதாணி( மெஹந்தி)கோன் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. உண்மையான மருதாணி இலையை அரைத்து மட்டுமே இந்த மருதாணி கோன் உற்பத்தி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் அதனை மீறி தெலுங்கானா மாநிலத்தில் மெஹந்தி நிறுவனம் ஒன்று போலியாக மருதாணி கோன்களை தயாரித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் உள்ள ஒரு மருதாணி கூம்பு தயாரி க்கும் தொழிற்சாலையில் போலியாக மருதாணி கூம்புகள் தயாரிப்பதாக தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த மருதாணி கூம்புகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி போலியாக தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டு பிடிக்க பட்டது.

    அந்த நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மருதாணி கூம்புகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில்

    அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.

    இது போன்ற அழகு சாதன பொருட்களில் பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.

    இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும் போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும்.இது உடல் நலத்தை பாதிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும்.
    • 2 மணிநேரம் முதல் 4 மணிநேரமாவது அப்படியே வைக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் சிறுவயதிலேயே நரைமுடி வருவது என்பது இயல்பாகி விட்டது. அது வருவதற்கு ஹெரிடிட்டி, டெஃபிஷியன்சி, நிறைய கெமிக்கல் கலந்த பொருட்களை உட்கொள்வது இந்த மாதிரி பல காரணங்களால் இளம்நரை ஏற்படுகிறது.

    இளம் நரையை மறைப்பதற்காக கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்தும் போது அது நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஸ்கின் இரிடேஷன், உடலில் கருப்பு தழும்புகள் ஏற்படுவது, உடல்நிலையை பாதிப்படைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரைமுடியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு ஹேர் டை செய்யலாம் என்று பார்க்கலாம்.

    மருதாணிபொடியும், அவுரி இலைபொடியையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் முடிக்கு கலரிங் செய்துகொள்ளலாம். அதற்கு முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும். அதற்கு இரும்பு பாத்திரமாக இருந்தால் வசதியாக இருக்கும். இதற்கு ஒரு இரும்பு கடாயில் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பொடியை சேர்க்க வேண்டும். இதில் ஒரு அரை கப் அளவுக்கு ஹென்னா பொடியை சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொடி முடிவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கலரிங்கை இன்னும் கருப்பாக்கி கொடுக்கும்.

    பீட்ருட் எப்போதுமே ஒரு நல்ல நேச்சுரல் கலரிங்கை கொடுக்கும். எனவே ஒரு ஸ்பூன் பீட்ருட் பொடியை சேர்க்க வேண்டும். இது கட்டாயமல்ல, வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ருட் பொடியை அதிகமாகவும் கலந்துவிடக்கூடாது. இந்த கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும். இந்த கலவையை உடனடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.

    இந்த கலவையை மறுநாள் காலையில் எடுத்து நன்றாக கலந்துவிட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு சொட்டு யூக்கலிப்டிஸ் ஆயில் அல்லது டீட்ரீ ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முடிவளர்ச்சிக்கு நல்லது.

    இந்த கலவையை எண்ணெய் இல்லாத சுத்தமான முடியில் தான் அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துவிட்டு அப்ளை செய்தால் கலர் ஒட்டாது. கைகளில் கலர் படியாமல் இருக்க கையுறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைமுடியில் மட்டும் படுகிற மாதிரி எல்லா பகுதியிலும் தேய்க்க வேண்டும். நன்றாக எல்லா முடிகளிலும் படுகிறமாதிரி அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவையை முடிகளில் தேய்த்த பிறகு நல்ல கலரிங் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் முதல் 4   மணி நேரமாவது அப்படியே வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சினை இருந்தால் ஒரு மணிநேரம் வைத்தால் போதுமானது. 4  மணி நேரம் கழித்து நல்ல தண்ணீர் கொண்டு மட்டுமே அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். சோப்பு, ஷாம்பு, சீயக்காய் வகைகளைபயன்படுத்தக்கூடாது.

    தலைமுடி பிரவுன் கலரில் இருக்கும். தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாவது கட்டமாக ஒரு பாத்திரத்தில் அரைகப் அளவுக்கு இண்டிகோ பொடியை எடுத்துக்கொள்ளவும் இதனை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து (உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும்) இண்டிகோ பொடியில் கலந்து 10 நிமிடம் மட்டுமே மூடி வைக்கவும். சூடான தண்ணீரில் மட்டும் தான் இண்டிகோ ஆக்டிவேட் ஆகும். இந்த கலவையையும் ஏற்கனவே ஹென்னா தடவி அலசிய முடியில் மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும்.

    இந்த இண்டிகோ கலவையை நன்றாக முடியில் தடவி ஒன்றரை மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை தலையில் ஊற வைத்து வெறும் தண்ணீரில் தான் கழிவ வேண்டும்., ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. இரண்டும் ஒரேநாளில் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்தடுத்த நாள் பயன்படுத்தலாம். ஆனால் இடையில் ஷாம்பு போடுவதோ, தலையில் எண்ணெய் தேய்ப்பதோ கூடாது. வெள்ளைமுடியோ, இளம் நரை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக் பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்.

    • தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது.
    • பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது.

    மருதாணி (மெஹந்தி) என பிரபலமாக அறியப்படும் ஹென்னா என்பது இயற்கையான மூலிகை தூள் ஆகும். இது முடியின் நிறத்திற்கு மட்டுமல்ல, beauty இதன் பொதுவான முடி பராமரிப்பு திறனுக்காக பொடுகுத்தொல்லை மற்றும் தலைமுடி அரித்தல் போன்ற மற்ற முடி சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

    தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது. ஹென்னா பவுடருடன் முட்டை கலந்து தலையில் போட்டு தேய்த்து குளித்து வர முடி நன்றாக வளரும்.

    இள வயதிலேயே நரை முடி எட்டிப் பார்க்கும் போது 'டை' அடிக்க முடியாது. எட்டிப்பார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை நீக்குவதும் கஷ்டம். இப்படிப்பட்டவர்கள், மருதாணி இலை, கையாந்துரை இலை, செம்பருத்தி இலை ஆகியவற்றை சம அளவில் கலந்து நிழலில் காய வைத்து மெஷினில் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

    வாரம் ஒருமுறை இந்தப் பொடியை குழைத்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்துவர நரைமுடி இருந்த இடம் தெரியாது. இக்கலவை மயிர்க்கால்களுக்கு பலமும் கொடுக்கும். இவற்றுடன் வேப்ப இலை கலந்தால் பொடுகு பிரச்சனையும் போய்விடும். மருதாணி குளிர்ச்சி என நினைப்பவர்கள் இரண்டு சொட்டு நீலகிரித் தைலம் தேய்த்துக் கொண்டால் சளி பிடிக்காது.

    பெரும்பாலும் ஹென்னா பயன்படுத்துவதன் மூலம் மற்ற கெமிக்கல் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை தவிக்கலாம். இது உங்கள் கூந்தளுக்கு ஊட்டமளிக்கவும், மென்மையாகவும் செய்து அழகூட்டுகிறது. ஹென்னாவை முடிக்கு கண்டிஷனராக பயன்படுத்துவதற்கு ஒரு எளிய வழி, கால் கப் மருதாணி பொடியை அரை கப் தயிருடன் கலந்து ஒரு மென்மையான பசையை தயாரிக்க வேண்டும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர் உங்கள் முடியில் இந்த கலவை தடவி 20 நிமிடங்களுக்கு அதை உலர விட்டு பின்பு தலை கழுவவும்.

    ஹென்னாவை முடியில் அடிக்கடி பயன்படுத்தும்போது, தலை பொடுகு சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இது பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது. தலை பொடுகை குணப்படுத்த, ஒரு சில வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அதை அரைக்கவும். இந்த கலவையில் மருதாணி மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பசையைப் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அதை உலரவிட்டு, பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவவும்.

    உங்கள் நரை மூடியை மறைக்கவும், உங்கள் தலைமுடிக்கு ஒரு அழகான பழுப்பு நிற இளஞ்சாயத்தை சேர்க்கவும் ஹென்னாவை பயன்படுத்தலாம். அதற்கு 3 தேக்கரண்டி நெல்லி தூள், ஒரு கப் ஹென்னா(இதற்கு புதிதாக அரைத்த மருதாணி இலையை தான் பயன்படுத்த வேண்டும்) சேர்க்கவும். இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து, உறிஞ்சும் தூரிகையை பயன்படுத்தி, தலையில் இக்கரைசலை உபயோகிக்கவும். ஒரு மணி நேரத்திற்கு அதை உலர விட்டு, ஒரு லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

    • பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள்.
    • மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.

    பண்டிகை காலங்களில் அதிலும் தீபாவளிக்கு முன்பு வீடுகளில் பெண்கள் கையில் மருதாணியிட்டு, அது அழிந்து விடாமல் இரவு முழுவதும் பாதுகாத்து காலையில் கையை கழுவிய பின் மருதாணி சிவப்பு நிறம் எந்த அளவு பிரகாசமாக உள்ளது என்பதை பார்த்து மகிழ்வார்கள்.

    இந்தியத் திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது. மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.

    பாரம்பரிய மருதாணி உள்ளங்கைகளிலும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது. கைகளை முழுவதுமாக மெஹந்தியால் அலங்கரிக்க விருப்பம் இல்லாதவர்கள் குறைவான டிசைனுடன் கூடிய ஸ்டைலை தேர்வு செய்துகொள்ளலாம்.

    மலர்கள் போன்ற டிசைன்களுடன் மெஹந்தி வரைவது உங்கள் கைகளை மேலும் அழகுபடுத்திக் காட்டும். இதற்கு ஏற்றவாறு ஆடை அணிந்தால் நாள் முழுவதும் மற்றவர்களின் பாராட்டு மழையில் நீங்கள் நனைவதை தவிர்க்க இயலாது.

    எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

    மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

    மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

    தற்போது மெகந்தி வந்து விட்டது. இதனால் வீடுகளில் மெகந்தி வரைபவருக்கு நல்ல வரவேற்பு உண்டு. வெளியிடங்களில் இருந்து வந்தும் கைகளில் மெகந்தி போட்டு விடுவது வழக்கம். இதற்கான மெகந்தி பேஸ்ட் கோன்களில் விற்கப்படுகிறது. இதனால் இளம்பெண்கள் மெகந்தி கோனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    • மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும்.
    • மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

    ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

    விதம் விதமான மெஹந்தி டிசைன்கள் குஜராத்தி மெஹந்தி டிசைன்: நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது.

    அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது. பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது.

    இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது. கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு கிளிட்டர் மெஹந்தி பரிந்துரைக்கப்படும். உடைக்கு மேட்ச்சாக ஜிகினா கலந்து பூக்கள், டாட்டூ போல பெரிய டிசைன்களாக வரைவதுதான் இதன் சிறப்பு. பார்ட்டி பிரியர்கள் அதிகம் விரும்பி போட்டுக் கொள்வதும் இந்த ஒரு நாள் மெஹந்திதான்!

    பிளாக் மெஹந்தி: இது இஸ்லாமிய நாடுகளில் பிரபலம். பூக்கள் நிறைய கொண்ட டிசைனில் வெளிக்கோடுகள் கருப்பு நிறத்திலும், உள் பக்கம் சிவப்பு நிறத்திலுமாக வரைவார்கள். கருப்பு-சிவப்பு காம்பினேஷனில் அந்த டிசைன் கண்களைக் கவரும். எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் யாருக்கும் அதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. எனவே, ரெடிமேட் மெஹந்தி கோன்களையே உபயோகிக்கிறார்கள்.

    ரெடிமேட் கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

    * லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

    * மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது.

    * இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய Para Phenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

    மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

    * சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், பொதுவாகவே ரெடிமேட் மெஹந்தி கோன்ஸ் உபயோகப்படுத்த வேண்டாம். முதல் முறை ரெடிமேட் கோன் வைத்து மெஹந்தி போட்டுக் கொள்கிறவர்கள் அதில் சிறிதளவை எடுத்து பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்துவிட்டு உபயோகிப்பது பாதுகாப்பானது. தரமான மெஹந்தி கோனால் அலர்ஜி வர வாய்ப்பில்லை. அப்படியே மெஹந்தியால் அலர்ஜி

    வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

    * சில தரமற்ற மெஹந்தி கோன்களில் நல்ல நிறம் வர வேண்டும் என்பதற்காக குங்குமம், சுண்ணாம்பு போன்றவற்றைக்கூட சேர்க்கிறார்கள். இவையும் நிறைய பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரிக்கும் முறை...

    நல்ல தரமான மெஹந்தி பவுடர் கடைகளில் கிடைக்கிறது. இதனுடன், எலுமிச்சைச் சாறு, டீ டிகாக்‌ஷன், சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பிறகு இந்தக் கலவையை 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு கோன்களில் அடைத்து, உபயோகப்படுத்தலாம்.

    மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்?

    * மெஹந்தி டிசைன் போட்ட இடத்தில், எலுமிச்சையும் சர்க்கரையும் கலந்த கரைசலை பஞ்சினால் தொட்டு டிசைன் மேல் ஒற்றி வரவும்.

    * டிசைன் காய்ந்து எடுத்த பின், தண்ணீர் படாமல் 4 மணி நேரம் பார்த்துக் கொள்ளவும்.

    * சுடுநீரில் 15 - 20 கிராம்பு போட்டு அதில் இருந்து வரும் ஆவியில் கையை காட்டினால், அதிக நிறம் வர வாய்ப்பு இருக்கிறது.

    * கையில் லோஷன், எண்ணெய், பிளீச் படாமல் பார்த்துக் கொண்டால், மெஹந்தி கலர் மாறாமல் இருக்கும்.

    "எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பது

    பாதுகாப்பானது."

    • சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது ‘போர்ட்ரைட் மெஹந்தி’.
    • மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    அழகு கலையிலும், பேஷன் உலகிலும் அடிக்கடி புது 'டிரெண்ட்' உருவாகி, பிரபலமாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அழகு கலையில், சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது, 'போர்ட்ரைட் மெஹந்தி'. அதாவது மருதாணியை பயன்படுத்தி, அடுத்தவர் முகத்தை தத்ரூபமாக வரைவதுதான், இன்றைய டிரெண்ட். அதில் எக்ஸ்பெர்ட்டாக திகழ்கிறார், உனாதி பட்டேல்.

    இவரது உருவ மெஹந்தி வேலைப்பாடுகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பிரபலம். அதுபற்றிய தகவல்களை வண்ணமயமாக பகிர்ந்து கொள்கிறார். ''கொரோனா ஊரடங்கு காலகட்டம் ஒவ்வொருவருக்கும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்தவகையில், நான் வட இந்திய டீன் ஏஜ் பெண்களுக்கே உரித்தான, போர்ட்ரைட் மெஹந்தியை கற்றுக்கொண்டேன்.

    சிறுவயதில் இருந்தே மெஹந்தி போடுவேன் என்றாலும், போர்ட்ரைட் மெஹந்தியில் இப்போதுதான் ஆர்வம் பிறந்திருக்கிறது. யூ-டியூப், இணையதளம் வாயிலாக இந்த கலையை பயின்று, நிறைய முயற்சிகள் மேற்கொண்டு, இன்று இதில் கை தேர்ந்தவராகி இருக்கிறேன்'' என்று உற்சாகமாக ஆரம்பிக்கும் உனாதி, மகாராஷ்டிராவை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி. சில காலம் ஐ.டி.துறையில் பணியாற்றிவிட்டு, இப்போது புதுமையான அழகு கலைகளை முயன்று வருகிறார். அதில் போர்ட்ரைட் மெஹந்தி இவரது தனித்துவ கை வண்ணமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

    ''என்னுடைய அப்பாவிடம் இருந்து ஓவிய கலையை கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்டிங் கலையும் முயன்றிருக்கிறேன். அதன் காரணமாக, ஓவிய மாதிரியிலேயே உருவாகும் மருதாணி ஓவியத்தை மிக சுலபமாக வரைய முடிந்தது. இதுவும் ஓவியம்தான். ஆனால் வண்ணத்தூரிகைக்கு பதிலாக மெஹந்தி கோனும், காகிதத்திற்கு பதிலாக கையும் பயன்படுத்தி வரையும் தத்ரூப ஓவியம். மற்ற ஓவிய வேலைகளின்போது தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    நிறைய பழகினால் மட்டுமே, கைகளில் மருதாணி ஓவியம் வரைய முடியும்'' என்று வர்த்தக ரீதியாக பேசும் உனாதி, பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு மெஹந்தி பூசியிருக்கிறார். குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட திருமணங்களில், உனாதியை பார்க்கமுடியும். புதுமையான வடிவங்களில் மெஹந்தி பூசி விடுவதுடன், உலக தலைவர்களின் ஓவியங்களையும், மருதாணியில் வார்த்தெடுத்திருக்கிறார். ''கை முழுக்க மெஹந்தி வரைய 2 மணி நேரம் தேவைப்பட்டால், இதுபோன்ற ஓவியங்களை வரைய கூடுதலாக அரை மணிநேரம் தேவைப்படும்.

    வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மணமகன்-மணமகள் ஓவியங்களை, கையில் மெஹந்தி ஓவியங்களாக வரையும், பழக்கமும் அதிகரித்திருக்கிறது. அதேபோல விஷேச நாட்களில், கடவுள் உருவங்களை கையில் வரையும் பழக்கமும், வரலாற்று சம்பவங்களை நினைவு கூறும் வகையிலான காட்சிகளை வரையும் டிரெண்டும் அதிகரித்திருக்கிறது. வட மாநிலங்களில் ஏற்கனவே வைரல் ஆகிவிட்ட இந்த போர்ட்ரைட் மெஹந்தி, சமீபகாலமாக தென்னிந்திய மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைரல் ஆகி வருகிறது'' என்றவர்,

    வருங்காலத்தில் இந்த கலை லாபகரமான பகுதிநேர தொழிலாக மாறும் என்றும் நம்பிக்கையோடு கூறினார். ''புதிய கலை வடிவமாக இப் போது இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் போர்ட்ரைட் மெஹந்தி, வருங்காலத்தில் பெண்களுக்கான அழகு கலை தொழிலாக மாறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வட இந்திய மோகம், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், மருதாணி ஓவியங்களுக்கு வருங்காலத்தில் அதீத வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.

    மேக்கப் கலை, புடவை கட்டிவிடுதல் போன்ற பகுதிநேர வேலை பட்டியலில் இதுவும் பெண்களின் விருப்பமான தொழிலாக மாற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சில நூறு ரூபாய் முதலீட்டில், பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும் என்பதால், கல்லூரி மாணவிகளிடம் அதீத வரவேற்பு பெறும். ஆனால் எல்லோராலும், இதை சுலபமாக செய்துவிடமுடியாது. கலைநயமும், பொறுமையும் இருப்பவர்களுக்கு, இந்த கலை லாபகரமான தொழிலாக மாறலாம்'' என்று நிறைவாய் பேசி முடித்த உனாதி, வருங்காலத்தில் மேலும் பல புதுமையான கலைகளை பயில ஆர்வமாய் இருக்கிறார்.

    • பக்கத்து வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு காலதாமதமாக வீட்டிற்கு சென்றதால் மகளை தாய் கண்டித்தார்.
    • பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மணியங்குடி கிராமத்தை சேர்ந்த, சுதாகர் என்ப வரின் 15 வயது மகள், நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்றுபக்க த்து வீட்டிற்கு சென்று, மருதாணி பறித்துவிட்டு, கால தாமதமாக வீட்டிற்கு சென்றதால்,மகளை சுதாக ரின் மனைவி கண்டித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்து ள்ளார்உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகு றித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×