search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல்
    X

    அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல்

    2020-ம் ஆண்டு தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

    அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை.

    கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×