என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணமதிப்பிழப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள மோடிக்கு தைரியம் உள்ளதா?: ப.சிதம்பரம்
Byமாலை மலர்11 Sep 2017 4:30 AM GMT (Updated: 11 Sep 2017 4:30 AM GMT)
பணமதிப்பிழப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மும்பை:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் காரணம். இந்த நடவடிக்கையின் விளைவாக 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 1.4 சதவீதம் என்ற அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால், ‘நான் ஒரு தவறான முடிவை எடுத்தேன்’ என்று ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவை. ரூபாய் நோட்டு வாபஸ் என்பது தவறான முடிவாகும். ‘அந்த தவறை நான் செய்து விட்டேன்’ என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்க வேண்டும்.
மறைமுகமாக மத்திய அரசு தனது தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா நீக்கப்பட்டார். திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி நீக்கப்பட்டார். இதற்கு திறன் மேம்பாட்டு லட்சியமும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
தொழிலாளர் நலக் கொள்கைகள் தோல்வியடைந்ததால்தான் தொழிலாளர் நலத்துறை மந்திரி நீக்கப்பட்டுள்ளார்.
நாடு தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசின் தவறான கொள்கைகளின் சுமையை இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலை வாய்ப்புக்குத் தயாராகின்றனர். ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது மேலும் பல மந்திரிகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக வேளாண்துறையில் ஏற்பட்ட தோல்விகளை தொடர்ந்து அத்துறை பதவியைப் பறித்திருக்க வேண்டும். ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளாதார நிலைமையை முன் வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா? என்று கேட்கிறீர்கள். பிரதமரை பதவி விலகுமாறு கோருவது சுலபமல்ல.
தொழில்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை ஆகியவற்றின் கொள்கைகள் தோற்றுவிட்டன என்று கருதியதால்தான் அத்துறைகளை கவனித்து வந்த 3 மந்திரிகளை பிரதமர் நீக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான் காரணம். இந்த நடவடிக்கையின் விளைவாக 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 1.4 சதவீதம் என்ற அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால், ‘நான் ஒரு தவறான முடிவை எடுத்தேன்’ என்று ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவை. ரூபாய் நோட்டு வாபஸ் என்பது தவறான முடிவாகும். ‘அந்த தவறை நான் செய்து விட்டேன்’ என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்க வேண்டும்.
மறைமுகமாக மத்திய அரசு தனது தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா நீக்கப்பட்டார். திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி நீக்கப்பட்டார். இதற்கு திறன் மேம்பாட்டு லட்சியமும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
தொழிலாளர் நலக் கொள்கைகள் தோல்வியடைந்ததால்தான் தொழிலாளர் நலத்துறை மந்திரி நீக்கப்பட்டுள்ளார்.
நாடு தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசின் தவறான கொள்கைகளின் சுமையை இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலை வாய்ப்புக்குத் தயாராகின்றனர். ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது மேலும் பல மந்திரிகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக வேளாண்துறையில் ஏற்பட்ட தோல்விகளை தொடர்ந்து அத்துறை பதவியைப் பறித்திருக்க வேண்டும். ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளாதார நிலைமையை முன் வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா? என்று கேட்கிறீர்கள். பிரதமரை பதவி விலகுமாறு கோருவது சுலபமல்ல.
தொழில்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை ஆகியவற்றின் கொள்கைகள் தோற்றுவிட்டன என்று கருதியதால்தான் அத்துறைகளை கவனித்து வந்த 3 மந்திரிகளை பிரதமர் நீக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X