என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும்: சிவசேனா கருத்து
Byமாலை மலர்21 Jun 2017 4:41 AM GMT (Updated: 21 Jun 2017 4:41 AM GMT)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் நமது கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்கள். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதற்காக டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தும், கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை கொளுத்தியும் துக்கம் கடைப்பிடித்த மக்கள் அதேநாளில் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதை வீதிக்கு வந்து கொண்டாடி இருக்க வேண்டும்.
டெலிவிஷன் பெட்டியை உடைப்பதற்கு பதிலாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை நாட்டு மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் காஷ்மீரில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் நமது கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்கள். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதற்காக டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தும், கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை கொளுத்தியும் துக்கம் கடைப்பிடித்த மக்கள் அதேநாளில் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதை வீதிக்கு வந்து கொண்டாடி இருக்க வேண்டும்.
டெலிவிஷன் பெட்டியை உடைப்பதற்கு பதிலாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்ப்பதை நாட்டு மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் காஷ்மீரில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X