என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: சரக்கு ஆட்டோ-லாரி மோதி 4 பேர் நசுங்கி பலி
Byமாலை மலர்22 Jan 2018 5:34 AM GMT (Updated: 22 Jan 2018 5:34 AM GMT)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த சிலர் இன்று காலை வத்திராயிருப்பு செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் பயணம் செய்தனர்.
அந்த ஆட்டோ வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் காடநேரி விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே விருதுநகரில் இருந்து செங்கல் பாரம் ஏற்றிய லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் பயணம் செய்த மாரியம்மாள் (வயது 40). லூர்து அம்மாள் (60), கருப்பாயி அம்மாள் (50) மற்றும் தொழிலாளி தங்கம் (60) சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மேலும் சித்ரா, காளியம்மாள், சாந்தி, ஆட்டோ டிரைவர் அன்பரசு ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த சிலர் இன்று காலை வத்திராயிருப்பு செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் பயணம் செய்தனர்.
அந்த ஆட்டோ வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் காடநேரி விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே விருதுநகரில் இருந்து செங்கல் பாரம் ஏற்றிய லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் பயணம் செய்த மாரியம்மாள் (வயது 40). லூர்து அம்மாள் (60), கருப்பாயி அம்மாள் (50) மற்றும் தொழிலாளி தங்கம் (60) சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மேலும் சித்ரா, காளியம்மாள், சாந்தி, ஆட்டோ டிரைவர் அன்பரசு ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X