என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார் விபத்தில் 6 பேர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Byமாலை மலர்23 Sep 2017 4:35 AM GMT (Updated: 23 Sep 2017 4:35 AM GMT)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியானதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி, தெக்கலூர் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், ஸ்கார்ப்பியோ வாகனமும், மோதிய விபத்தில், ஸ்கார்ப்பியோ கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த, கந்தசாமி, மணி (எ) முத்துசாமி மற்றும் ரத்தினம், எடப்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் (எ) ராமு, கதிர்வேல், நல்லசாமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் வாகன ஓட்டுநருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி, தெக்கலூர் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், ஸ்கார்ப்பியோ வாகனமும், மோதிய விபத்தில், ஸ்கார்ப்பியோ கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த, கந்தசாமி, மணி (எ) முத்துசாமி மற்றும் ரத்தினம், எடப்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் (எ) ராமு, கதிர்வேல், நல்லசாமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் வாகன ஓட்டுநருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X