search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் லாரி மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
    X

    தூத்துக்குடியில் லாரி மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை

    தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் லாரி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்துநகர் கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜெயராம் (வயது 18). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல ஜெயராம் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

    துறைமுகச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சமீபகாலமாக தூத்துக்குடியில் லாரிகள் அசுர வேகத்தில் ஓட்டப்படுவதாகவும், அதனால் தான் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் புகார் கூறினர். எனவே லாரிகள் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×