என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் லாரி மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 Jun 2017 10:26 AM GMT (Updated: 26 Jun 2017 10:26 AM GMT)
தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் லாரி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி முத்துநகர் கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜெயராம் (வயது 18). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல ஜெயராம் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
துறைமுகச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக தூத்துக்குடியில் லாரிகள் அசுர வேகத்தில் ஓட்டப்படுவதாகவும், அதனால் தான் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் புகார் கூறினர். எனவே லாரிகள் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி முத்துநகர் கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜெயராம் (வயது 18). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல ஜெயராம் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
துறைமுகச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக தூத்துக்குடியில் லாரிகள் அசுர வேகத்தில் ஓட்டப்படுவதாகவும், அதனால் தான் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் புகார் கூறினர். எனவே லாரிகள் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X