என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்7 May 2017 7:40 PM GMT (Updated: 7 May 2017 7:40 PM GMT)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உள்மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பகல் நேரங்களில் வெப்பம் சீராகவே இருக்கும்”, என்றனர்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 3 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நெல்லை மாவட்டம் தென்காசியில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உள்மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பகல் நேரங்களில் வெப்பம் சீராகவே இருக்கும்”, என்றனர்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 3 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நெல்லை மாவட்டம் தென்காசியில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X