search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இன்று கல்லூரி மாணவர் விபத்தில் பலி: மாணவி படுகாயம்
    X

    சேலத்தில் இன்று கல்லூரி மாணவர் விபத்தில் பலி: மாணவி படுகாயம்

    சேலத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மாணவி படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்மின்நகர் அருணகிரி நாதர் தெருவைச் சேர்ந்தவர் அருட்செல்வன். இவரது மகன் அருணாசலம் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    திருச்சி தொட்டியத்தை சேர்ந்த சுபாஷினி (21). இவரும் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் அரிசிபாளையத்தில் தனித்தனியாக விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பயிலுவதால் இன்று வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு ஒன்றாக சென்றனர்.

    லீபஜார் அருகே உள்ள வளைவில் சென்றபோது முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் அருணாசலம் லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாணவி சுபாஷினி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசாரும், வடக்கு போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவி சுபாஷினியை 3 ரோட்டில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×