

சாதகமான வாரம். ராசி அதிபதி குருவை பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். இது குருமங்கள யோகமாகும். புத்திகூர்மை, தெய்வ அனுகிரகம், ஞானம் போன்றவைகள் அதிகமாகும் மற்றவர்களால் முடிக்க முடியாத செயல்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். நாள்பட்ட வியாதிகள் மறைந்து ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் நிலவும். அர்தாஷ்டமச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம். சனிக்கிழமை பசுவிற்கு பழம், கீரை, தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406