

மகிழ்ச்சியான வாரம். தற்போது ராசியில் பதியும் குருப் பார்வை ஒரு சில வாரங்களில் தன ஸ்தானத்தில் பதியப் போவதால் குருப்பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் தற்போதே தெரியத் துவங்கும். தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். ஏழரைச் சனியை மீறிய நல்ல பலன் கிடைக்கத் துவங்கும். தன லாப அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள ராகுவை பார்ப்பதால் பொருளாதார நிலை சாதகமாகும்.
அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். வீண் கவலைகளை விடுத்து கடமைகளை சரியாகச் செய்தால் அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். 28.4.2026 அன்று அதிகாலை 3.36 முதல் 30.4.2026 அன்று பகல் 1.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் ஏற்படலாம். சனிக்கிழமை காலபைரவ அஷ்டகம் படிக்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406