விரைவில் புதிய Mi பேன்ட் அறிமுகம் செய்ய சியோமி திட்டம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் 3 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பீஜிங்:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் ஃபிட்னஸ் டிராக்கரின் மூன்றாம் தலைமுறை மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளது. 

ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்படுகின்றன. முன்னதாக வெளியான தகவல்களில் Mi பேன்ட் 3 சாதனம் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஆண்டு விழா நிகழ்வில் புதிய ஃபிட்னஸ் டிராக்கர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் தொடுதிரை டிஸ்ப்ளே வழங்கப்பட்டு, பட்டன்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை சியோமி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. எனினும் Mi பேன்ட் 3 டீசர் அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

2018 சியோமி ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் துவங்க இருக்கும் சியோமி விழாவுக்கான நுழைவு சீட்டுக்களை அந்நிறுவனம் 799 முதல் 1999 யுவான் வரை கட்டணம் வசூலித்து வருகிறது. விழாவில் மொத்தம் 5000 பேர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன விழாவை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சியோமியின் Mi கிரவுட்ஃபன்டிங் திட்டத்தின் கீழ் உருவான முதற்கட்ட சாதனங்களை வெளியிட்டது. அதன் படி Mi ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டது. ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் விலை ரூ.999 மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் விலை ரூ.1,099 என விலை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com