சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் மூன்று இந்திய வம்சாவெளியினர் தேர்வு

உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.
சாந்தனு நாராயண்
சாந்தனு நாராயண்
Published on

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ 2019ஆம் ஆண்டின் உலகளவில் சிறந்து விளங்கும் 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகி இருக்கின்றனர்.

அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடத்திலும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7 ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9 ஆவது இடமும் பிடித்துள்ளனர். 

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவை சேர்ந்த ஜென்சன் ஹாங் முதலிடம் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com