பெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்கும் டிம் குக்

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு பணிகளுக்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.
டிம் குக்
டிம் குக்
Published on

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

`இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவருடன் ஆப்பிள் துணை நிற்கிறது. களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்கும்,' என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுக்க மிகத்தீவிரம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com