சார்க் நாடுகளில் முதலிடம் பிடித்த இந்தியா

சார்க் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் 2020 நான்காவது காலாண்டில் இந்தியா அசத்தி இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இந்திய சந்தையில் 2020 நான்காவது காலாண்டில் அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ முதலிடம் பிடித்து இருக்கிறது. இத்துடன் அதிவேக மொபைல் டவுன்லோட் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வி முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவல்களை முன்னணி ஆய்வு நிறுவனமான ஊக்லா தெரிவித்து உள்ளது.

இதுதவிர அதிவேக பிராட்பேண்ட் வழங்கிய சார்க் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. ஊக்லா வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் பல்வேறு பகுதிகளில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையின் தரம் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஜியோவை தொடர்ந்து ஏசிடி, ஏர்டெல், எக்சைடெல் மறஅறும் பிஎஸ்என்எல் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மொபைல் டேட்டாவை பொருத்தவரை வி அதிவேக டவுன்லோட் வழங்கி முதலிடம் பிடித்து இருக்கிறது. வி நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல், ஜியோ அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com