சாம்சங் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வலைதளங்களில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Samsung #androidgoedition
புகைப்படம் நன்றி: Android Police
புகைப்படம் நன்றி: Android Police
Published on

சாம்சஹ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ2 கோர் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சாம்சங் மற்றொரு ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

மற்ற ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல், கேலக்ஸி ஜெ4 கோர் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 6.0 இன்ச், 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

- 1 ஜி.பி. ரேம்

- 16 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்

- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன்

- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புளு, பெய்க் மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com