அடுத்த மாதம் புதிய அறிவிப்பை வெளியிடும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் கான்செப்ட் ஒன் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறது.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ்
Published on

ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) கலந்து கொள்ள இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இவ்விழா நடைபெற இருக்கிறது. 

ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்டுள்ள புதிய தகவல்களின் படி, ஒன்பிளஸ் தனது முதல் கான்செப்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போன் எதிர்கால சாதனம் என குறிப்பிட்டு இருக்கும் பீட் லௌ, இந்த ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து ஆறு வருடங்கள் நிறைவுற்றதை ஒன்பிளஸ் கொண்டாடி வருகிறது.

ஒரு வடிவமைப்பை இறுதிப்படுத்தும் முன் ஒன்பிளஸ் பல்வேறு ப்ரோடோடைப்களை உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எனினும், பொதுவெளியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கான்செப்ட் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. இந்த போனில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com